அம்மா கவிதை
தாய்மை
ஈரைந்து திங்கள்
இன்பமுடன் எனை
மடியினில் சுமந்தவளே !
உனதுறுப்பை பிளந்து
உதிரத்துடன் உயிர் நோக
எனை ஈன்றவளே !
பசியறிந்து
இரத்தத்தை
பாலாக்கி
பருகச்
செய்தவளே !
என் சிறு அசைவையும்
சிரத்தையுடன் கண்டு
ரசித்தவளே !
சிறு பிள்ளைத்தனமாய்
நான் கேட்கும் கேள்விக்கெல்லாம்
சிரித்துக் கொண்டே
விடை பகா்ந்தவளே !
பள்ளி செல்லும்
முதல் நாளில்
மிரட்சியுடன்
நான் செல்லும் காட்சிகண்டு
ஆனந்தத்தில் திளைத்தவளே !
பருவ வயதினிலே
குறும்புக்கார ஹாா்மோன்
கள்வனை
கட்டுக்குள்
வைக்க
கற்றுக் கொடுத்தவளே !
தன்னம்பிக்கையுடன்
தரணியிலே வெற்றிக்கனி
நான்!
பறிக்க
வேராய் . . .
விழுதாய் . . .
மரமாய் . . .
எனைத்தாங்கி நிற்பவளே !
என்தாயே !
உன்னையன்றி
நான் தொழவே . . .
வேறு தெய்வம்
இல்லையம்மா !
ஈரேழுலகத்திலும் . . .!
-ரேணுகா ஸ்டாலின்

Post a Comment