காதல் கவிதைகள்
சிறகடிக்கும்
என் சிறகொடித்து
சிற்றின்பம் காணும்
சிந்தை தான்
உன் காதலென்றால்
காதலிசம்
வேண்டாமடா எனக்கு
மோதலிசத்துடன்
முற்றுப் பெறட்டும்
நம் காதல் . . !
#யாதுமானவன்_நீயடா
கண்களில் நீயே
கருத்தினில் நீயே/
கரம்பற்றத் துடித்திடும்
கண்ணாளனும் நீயே/
மங்கையென் மனதினுள்
மஞ்சமிட்டுத் துஞ்சிடும்/
மான்விழி மயக்கிய
மாயவனும் நீயே/
சோகங்கள் தீண்டிடா
மகிழ்வாழ்வு அளித்திடும்/
ராமனவன் சாயலினில்
என்ரட்சகனும் நீயே/
ஊனோடு உயிராக
உதிரத்தில் கலந்தே/
உறக்கத்திலும் என்னுள்
உறைந்தவனும் நீயே/
அகிலத்து அழகியென
அன்போடு அரவணைத்து/
ஆனந்தம் தந்திடும்
யாதுமானவனும் நீயே/
*ரேணுகா ஸ்டாலின்*
#இடைச்சொல்_போட்டி
அன்பால் இணைந்து
ஆனந்தம் கொண்டோம்/
இல்லறம் நல்லறமாக
இன்பம்பல கண்டோம்/
#கனிந்திட்ட_காதலே
காலங்கள் தோறுமே/
கரம்கோர்த்து நித்தமே
தொடர்ந்திட வேண்டியே/
இறையருள் இருவருக்கும்
வரமாக வேண்டுமே/
*ரேணுகா ஸ்டாலின்*
காதல் கவிதை-மாயக்கண்ணா
சில மௌனங்களால்
நல்வழிகள் பிறக்கும்
வாழ்க்கை சிறக்கும் . . !
சில மௌனங்களால்
தடைகள் வந்து
வாழ்க்கை தடங்கள் மாறும் . . !
சில மௌனங்களால்
கவலைகள் மறந்து
களிப்புறத் தோன்றும் . . !
இப்படியாக மௌனங்கள்
பல ரகமாக உள்ள போதுமே
உந்தன் மௌனமோ!!!
இவ்வெதிலும் சேராமல்
என் உயிர் கொள்/ல்வதையே
குறிக்கோளாக
கொண்டுள்ளதேனடா . . !
என் மாயக் கண்ணா . . !
ரேணுகா ஸ்டாலின்✍

Post a Comment