Kalaingnar_vaalthu_kavithai

           


       முத்தமிழறிஞர் கலைஞர்        

                       பிறந்தநாள்

                 வாழ்த்துக்கவிதை

 முத்துவேலரும் அஞ்சுகமும்

பெற்றெடுத்த பெருஞ்சொத்து/

தன்னிகரில்லா தலைமகனை

தமிழ்த்தாய்க்கு தத்துக்கொடுத்து/

புன்னகை புன்முறுவலோடு

தண்டவாளத்தில் தலை வைத்து/

தமிழ் வளர்த்த மொழிப் பற்றாளர்

தென்னகத்து தாகூராம்

நம் கலைஞரை முத்தமிழறிஞரை

உலகிற்கு அற்பணித்து/

உலகத் தமிழர்கள் நெஞ்சில் 

நிறைத்து மறைந்த

தங்களுக்கு நன்றிகளோடும் வணக்கங்களோடும்/


#முத்தமிழும்_கலைஞரும்


முத்தமிழை உயிராக, நேசித்து சுவாசித்து வாழ்ந்த பைந்தமிழே! 


இயல், இசை, நாடகம் அத்தனையும் உனக்கு கைவந்த கலையே/


சின்னஞ்சிறு வயதிலேயே 

போராட்ட களம் பல கண்ட போராளியே!  முக்கடலின் எழுச்சி சிலையே! 


அரசியலோ ஐந்து முறை சூட்டியது

முதல்வர் மாலையே/

உலகோர் போற்ற உயர்ந்த

ஏழைகளின் உதய சூரியச் சோலையே/


பெரியாரின் போர்வாளே

அண்ணாவின் பொறிவாளே/

என்றென்றும் உன் பெயர் சொன்னால் திரிகள் அச்சத்தில் விழிபிதுங்கி நிற்பாரே/


மொழியையும், இனத்தையும், தம் இருகண்களென காத்த காவலரே/ 


பராசக்தி, பூம்புகார், மலைக்கள்ளன்,

மனோகரா வென இன்னும் எத்தனை எத்தனையோ நின் எச்சங்கள் 

தொட்டது தமிழின் உச்சங்களே/


அனல்தெறிக்கும் வசனத்தில்

எதிரொலித்த கரவொலியில்

கன்னித்தமிழ் வளர்த்தவரே/


மென்மையான காதல் கவி வரியில்

மதி மயங்கிய பாமரனையும்

எழுத்தாளனாக எழ வைத்தவரே/


நல் சிந்தையே புது விந்தையே

சிலேடை உரையாடலில் தரணி போற்றும் தமிழ்த் தந்தையே/


கொஞ்சுதமிழ்ப் பேசி தமிழ்

நெஞ்சமதை ஈர்த்து

பகுத்தறிவுப் பாதையிலே

பயணித்த செந்தமிழே/


பைந்தமிழில் சென்னையென

பெயர் சூட்டிய சூரியச் சுடரே/

அய்யன்திரு வள்ளுவர்க்கு

அலைகடலில் சிலை வைத்தவரே/


அமிழ்தான நூல்களெழுதி பாமாலை சூட்டி ன்னைத் தமிழுக்கு 

அற்பணித்தவரே/

முகவரியில்லா தமிழர்க்கு

முகமான தலைவரே முத்தமிழறிஞரே/


நீவீர் இம்மண்ணில் 

இல்லையென்றாலும் 

தமிழும், தமிழனும் உள்ள வரை

நின் பெயர் நிலைத்திருக்குமே/

வாழிய நின் புகழ் வாழிய வாழியவே/ 


             *ரேணுகா ஸ்டாலின்*


0/Post a Comment/Comments