Samooga_kavithai

 


#நீயென்ன_ஆண்டவனா_அரக்கனா!!


அகிலத்தைக் காக்கும்

ஆண்டவன் நீயென்று

அகவறைக்குள் உனைவைத்து

அனுதினமும் பூஜித்தேன் . . .


அன்றாடம் நீதந்த

அவலங்கள் யாவையுமே

அசறாது போராடி

ஆலயத்தில் தொழுது நின்றேன் . . .


அண்ட சராசரங்கள் எல்லாம்

அழிகின்ற வேலையிலும்

அமைதியாய் நீயிருக்க

அன்போடு நின் தாழ் பணிந்தேன் . . .


அங்கத்தை ஊனமாக்கி 

உதாசித்தாய் .!!!

வலியை மட்டும் வாழ்வாக்கி 

ரசித்து நின்றாய் !!!

நித்தம் நித்தம் போராடும்

நிலையைத் தந்தாய் !!!


அத்தனையும் தாங்கி நின்று

கண்ணீரில் தத்தளித்தும் 

கரந்தனிலே ஏதுமின்றியும்

கவலையை மறப்பதற்கே

கைகூப்பி வணங்க வந்தேன் . . .


ஆனாலும் இரக்கமின்றி

அதற்கெல்லாம் கைமாறாய்

அருள் தரவும் தோனாது

அழித்திடவும் செய்யாது

ஊனோடு உயிராக

உதிரத்தில் கலந்துள்ள 

என் இதயம் பறித்தெடுத்து 

கிழிப்பதேனோ !!!

நீயென்ன அரக்கனா .!! 

ஆண்டவனோ .!! 

விடை பகர்வார் யாரோ??


          *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments