வேற்றுமையில் ஒற்றுமை
மொழி இன மதத்தாலே
பிரிந்திருந்த போதிலும் . . .
குணத்தாலும் நல்மனத்தாலும்
என்றென்றும் பிரிவில்லா
பேரின்ப பெருஞ் சுடர் நாம் . . .
சாதி மத பேதமது
நீக்கமற நெஞ்ச மெல்லாம்
நிறைந்திருந்த போதிலும் . . .
உள்ளத்தாலும் நல்உணர்வாலும்
நானிலம் காக்க நித்தமும்
போராடும் பேதமில்லா
பெருமைமிகு பெருஞ் சுடர் நாம் . . .
சாதிக் கொரு சங்கமென்றும்
வீதிக்கு நூறு வில்லங்கமென்றும்
விளைந்திருந்த போதிலும் . . .
இயற்கை சீற்றங்களாலும்
கொடுந் தொற்று நோயாலும்
பெருந்துன்பம் வந்து
அவதியுறும் போது . . .
ஆதரவாய் தோள் சாய
தோளனாகி தோள் கொடுத்து
தொல்லைகள் ஏதுமின்றி
துன்பங்கள் யாவற்றையும்
தூரமாய் துரத்தியடித்து
இன்பங்களை மீட்டுத்தரும்
இதமான பெருஞ் சுடர் நாம் . . .
மனிதம் காக்கும் மானிடர் நாம் . . .
ஏராளமாய் வளங்கள்
செழித்திருக்கும் போதிலும்
தாராளமாய் பிரிவினையும்
தழைத்திருக்கும் தேசமிது
பிரிவினையை வேரறுத்து
ஒற்றுமையை ஓங்கச் செய்து
வேற்றுமையில் ஒற்றுமை
காண்பதே நம்பெருமை . . .
தேசத்தை துண்டாட
எவர் வந்தாலும் எதிர்
நின்றெதிர்த் தாலும்
இணைந்திருந்து
தகுந்த பதிலளிப்போம் . . .
எதிரிகள் பதறி தூள் தூளாய்
சிதறியோட விரட்டியடிப்போம் . . .
வேற்றுமையில் ஒற்றுமை
காண்பதே நம்பெருமை
என உணர்ந்து ஒன்றிணைவோம் . . .
ஒற்றுமையை ஒங்கச் செய்வோம் . . .
*ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment