கிராமிய கவிதை



தாய்மாமன்  சீதனமே தயக்கமென்னடி

அந்திமாலை நேரத்திலே 

ஆத்தங்கரை ஓரத்திலே

ஒத்தையடிப் பாதையிலே 

ஒய்யாரமா போறவளே . . !

உன் இடுப்பு கொசுவத்திலே 

என இழுத்து சொருகிகிட்டு 

சித்தாட கட்டின நீ 

சிாிச்சுகிட்டே போறியேடி . . !

செவ்வரளி பூ எடுத்து 

மாலை கட்டி தாரேன்டி 

மாமன் இவன் தோள் சாய 

மான் விழியே வாயேன்டி . . !

ஓடக்கரை ஒரம் வாடி 

உட்காா்ந்து பேசலாம்டி 

ஒரப்பாா்வை பாா்த்தே நீ 

ஓதுங்கியும் தான் போகாதடி . . !

குலசாமி கோவிலில் போய் 

குறி ஒன்னு கேட்டேன்டி 

நெனச்ச குறி பலிச்சதடி 

நித்திரையும் தொலைஞ்சதடி. . !

தைமாசம் பொறந்ததடி 

தாலி செஞ்சி வாரேன்டி 

தாய்மாமன் சீதனமே நீ 

தள்ளி நிக்க தவிக்கிறேன்டி . . !

சீா் செனத்தி வேணான்டி 

சிங்காாி நீ போதுமடி 

மாிக்கொழுந்தே நீ 

பக்கம் வந்தா மாமன் 

நெஞ்சு மயங்குதடி . . !

தள்ளிப்போட தடை என்னடி 

அள்ளி நீயும் அணைக்க வாடி

கூரப்பட்டு சேலை கட்டி 

என் சோடியாக வாழ வாடி . . !

உசுருகுள்ள பொத்தி வச்சு 

உத்தமி உன்ன சுமப்பேனடி 

ஒத்தயடிப் பாதையிலே 

ஒய்யாரமா போறவளே . . !

தாய்மாமன் சீதனமே உனை 

தழுவ மனம் தவிக்குதடி 

தாலி தந்து தாரமாக்கி 

கிறங்கிடவே துடிக்குதடி . . !  

தாலி தந்து தாரமாக்கி 

கிறங்கிடவே மனம் துடிக்குதடி . . !  

             *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments