சரித்திரம் போற்றும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கார்


சரித்திரம் போற்றும் சட்டமேதை 

அண்ணல் அம்பேத்கார் பிறந்ததினம் இன்று


பகுத்தறிவு தந்திரங்களை

மந்திரங்களாய் ஓதி

மக்கள் மனதில் ஒலிக்கச் செய்த

அகங்காரம் இல்லா ஓங்காரம் . . .


பட்டங்கள் பல பெற்று

சட்டங்களை கற்றுத் தெளிந்து

நல் திட்டங்களாய் உருவாக்கிய

உலகோர் போற்றிப் புகழும்

உயர் உன்னதம் . . .


அட்டையாய் உழைப்பை

உறிஞ்சும் முதலாளிகளிடம்

அடிமைப்பட்டு அறியாமையில்

மூழ்கியோரை மீட்டெடுக்க

சட்டப் புத்தகத்தில் 

புது சாசனம் எழுதி - 

சாமானிய மக்களைக்  காக்க 

வந்த சட்ட மேதை . . .

 

மனித பாகுபாடுகளைக் 

களைந்து சமத்துவ சக்கரத்தை

சுழலச் செய்த சூத்திரம் . . .

பேதைகளாய் வாழ்ந்த மக்களை

மேதைகளாய் உருவாக்க

பாடுபட்ட மனிதம் போற்றும்

மங்கா புகழ்மிக்க மாமேதை . . .


பெண்ணடிமை ஒழித்து 

பேரின்பம் கண்டவர் . . .

தீண்டாமைக்கு தீமூட்டி

திசை எங்கும் போற்றப்பட்டவர் . . .


பாரத தேசத்தின் 

பட்டை தீட்டிய வைரம்

அகில மக்களை பண்படுத்திய 

ஆற்றலின் அடையாளம் . . .

அண்ணல் அம்பேத்கர் புகழ் 

என்றென்றும் வாழிய வாழியவே . . .


 ரே.ஸ்.சபரிஸ்ரீ கௌசல்யா

              VII - th Std 

நா.சு.வி.வி.மெட்ரிக் மேல்நிலைப் 

    பள்ளி, பட்டிவீரன்பட்டி.

0/Post a Comment/Comments