வருசமெல்லாம் வசந்தம் படத்தில் எங்கே அந்த வெண்ணிலா பாடலுக்கு எனது மாற்று வரிகள்
பல்லவி :
எந்தன் உயிர் காதலா/
எந்தன் உயிர் காதலா/
எந்தன் உயிர் காதலா/
எந்தன் உயிர் காதலா/
என்னை உனதாக்கினாய்
உள்ளம் தனை தாக்கினாய்/
எந்தன் உயிர் காதலா/
எந்தன் உயிர் காதலா/
எந்தன் உயிர் காதலா/
சரணம் : 1
தனிமை சிறையில் நான்
சருகாய் உதிர்கிறேன்/
உன் நினைவில் தானடா
உன் நினைவில் தானடா/
என்னை மறந்து நான்
உனையே நினைக்கிறேன்/
உன் பிரிவில் தானடா
உன் பிரிவில் தானடா/
இயற்கையே இணைத்தது
நம் காதல்/
அதில் வலிகளைக்
கொடுக்குது உன் ஊடல்/
இணை பிரியாதது
நம் பந்தம்/
அதில் சுகங்களை கூட்டுது
தினம் கூடல்/
அன்பே பிரிவால் என்னை
வதைத்தாய் போதும்/
நீதான் எந்தன் முதல் எழுத்து
என்றும் நீதான் எந்தன் முதலெழுத்து
(எந்தன் உயிர் காதலா)
சரணம் : 2
இருளில் நடக்கிறேன்
ஒளியாய் தொடர்கிறாய்/
விழியில் விழுந்த நீ
மனதில் நுழைகிறாய்/
அகத்தில் நிறைந்தவன்
புறம் ஏன் செல்கிறாய்/
புரிதல் இன்றியே
பிரிந்தேன் வதைக்கிறாய்/
கண்களில் உந்தன்
பிம்பங்களே/
அதைத் தீட்டிட எனக்கொரு
துயர் எதற்கு/
நெஞ்சினல் உந்தன்
நினைவுகளே/
அதைச் சுமப்பதில்
எனக்கொரு சுகம் இருக்கு/
நான் உறைந்தால் என்ன?
கரைந்தால் என்ன?
நம் காதல் என்றும் வரம் எனக்கு/
உயிர் காதல் என்றும் வரம் எனக்கு/
(எந்தன் உயிர் காதலா).
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment