கிராமத்து கைமணம் ரசிச்சு ரசிச்சு சாப்பிட தயாரா

 


சமையல் டிப்ஸ் 

#வாழை_இலை_அல்வா

#தேவையான_பொருட்கள்

1. வாழை இலை – 2 (இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமானதாக பார்த்துக் கொள்ளுங்கள்)

2. சோள மாவு – கால் கப்

3. சர்க்கரை – கால் கப்

4. முந்திரி – தேவையான அளவு

எலுமிச்சம் பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்

நெய் – 6 டேபிள் ஸ்பூன்

#செய்முறை

* இரண்டு வாழை இலைகளையும் எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.

* அந்த விழுதை  நன்றாகப் பிழிந்து  

சாறாக  எடுத்துக் கொள்ளவும்.

* அதன்பின் அடுப்பில் கடாய் வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரியைப் போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். 

* அதே கடாயில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை  சாற்றை ஊற்றி பச்சை வாசம் போகும் வரை கிண்டவும். 

*  பின்பு ஒரு பாத்திரத்தில் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும்.  

*  கரைத்த சோள மாவினை வாழை இலை சாற்றோடு ஊற்றி கட்டிகள் விழாமல்  கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

*இறுதியாக அதில்  சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கடாயில் ஒட்டாமல் வரும் பதத்தில் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். 

* இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரியை  மேலே தூவி அலங்கரிக்கவும். 

இப்போது சூப்பரான வாழை இலை அல்வா ரெடி.


0/Post a Comment/Comments