#தந்தை_நம்மின்_தெய்வம்
அறுசீர் விருத்தம் (சீர் வரையறை - மா மா காய்)
உலகம் முழுதும் புகழ்ந்திடவே
உன்றன் அன்பே அரணாகும்/
விலகா தெனக்குப் பசியாற்ற
வியர்வைத் துளியை சிந்தியுமே/
சிலநாள் சிந்தைத் தெளிவற்ற
சிறுபெண் யென்னைச் சீர்படுத்தும்/
மலர்ந்த மனிதன் நீதானே
மகிழ்ந்து நீயும் வாழ்த்திடுவாய்/
எண்ண முடியா ஓட்டங்கள்
எடுத்தாய் நீயே வல்லவனே/
வண்ணம் முழுதும் மகிழ்ந்திடவே
வரங்கள் நூறு தந்தவனே/
பண்ணால் உனையே பாடுகின்றேன்
பாரில் நின்போல் யாருண்டு/
மண்ணில் தந்தை யுன்அன்பே
மனத்தில் இருந்து வேண்டுவதே/
என்றன் உயர்வை ரசித்திடவே
ஏக்கங் கொண்ட தூயவனே/
அன்று சொல்லைக் கேட்டதனால்
அமைதி தானென் வாழ்வினிலே/
பன்னாள் யென்னை வளர்த்திடவே
பாசம் வைத்த பிறைநிலவே/
அன்பின் உறவாய் யுனைப்போல
அகிலம் தன்னில் யாருமுண்டோ!!
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment