ஆழ்மனதின் அழகிய ஸ்வரமாய் வீற்றிருக்கும் இராக தேவன் இசைக்கடவுள் இளையராஜா அவர்களுக்கு ஓர் கவிதை {நிபந்தனையற்ற அன்பையும், காதலையும், துயரங்களையும் படிப்பவர்களுக்குக் கடத்துவதில் கவிதைக்கு நிகர் வேறெதுவும் இருக்க முடியாது}

 


ஆழ்மனதின் அழகிய ஸ்வரமே

பண்ணைப்புரத்து ராசனே 

பண்ணிசைக்கும் வேந்தனே

விழிமையின் நிறத்தோனே

எளிமையின் நாயகனே/

நின் கைவிரல் எனும் 

கருவறையில்

கணந்தோறும் நடக்குது

கானப் பிரசவமே/

கணக்கும் இதயமும்

நின்னிசை கேட்டதும்

காற்றில் பறக்கும்

காகித மாகிடுதே/

சில்லென்று இசைபாடி

செவிப்பறையை சிறைபிடித்து

சிந்தை தனை சீராக்கி

செழிப்பாக்கியவனே/

நந்தவனப் பூக்களெல்லாம்

நற்றவம் செய்திடுதே

நின்னிசை கேட்டு

நர்த்தனம் ஆடிடவே/

ரணப்பட்ட இதயத்திற்கு

ராகத்தால் மருந்திட்டு

புதுரத்தம் பாய்ச்சிடுதே

நின்னிசைப் பாட்டு/

பக்திக்கும் புத்திக்கும்

பாட்டுக் கட்டியவனே

மனசைக் கட்டிப்போட்டு

பூட்டியவனே/

பாதைமாறிப் போனவனும்

உன் இசை போதையால்

நல் பாதையில் வாழத்

துடிப்பானே/

கார்முகில் வானமும்

நின்கான மழையில்

நனைந்திடத் துடித்திடுதே/

மூடாத இமைகளும்

நின் தேவகானம் கேட்டிங்கே

கண்மூடி நல் கனாக்கள்தான்

கண்டிடுதே/

தாலாட்டு கேட்காத

தத்தைகளும் இங்குண்டு

நின்கானம் கேட்காத

தமிழனும் இங்குண்டோ!!

நித்திரை இழந்து வாடி

நீர்க்குமிழிக்குள் அடைபட்ட 

நிசப்த பொழுதுகளும்

நின்னிசையால் நிம்மதி

கண்டிடுதே/

முற்றும் துறந்த முனிவனும்

நின்னிசையால் நிற்கிறானே

முதல் காதல் பூத்த நாணத்துடனே/

இன்னுமென் பிறவி கொஞ்சம்

நீளட்டுமே - நின்னிசை கேட்டபடி

நிம்மதி பெருமூச்சிட்டு வாழ்ந்திடவே/ 

காந்தக் குரலில் கவர்ந்து இழுத்து

துள்ளிசையிலும் மெல்லிசை கலந்து/

தெள்ளு தமிழில் தெம்மாங்கு கொடுத்து

தாலாட்டுப் பாடும் தாயாக வந்து/

உன் இசையால் உயிரில் நுழைந்து

எங்கள் மூச்சுக்காற்றை

மொத்தமாய் குத்தகை எடுத்து

கும்மாளமிடும் ராக"தேவனே

தமிழ்த்தாயின் தன்னிகரில்லா 

தவப் புதல்வனே/

தமிழனின் நெஞ்சில்

நிறைந்த இளைய ராஜனே

என்றென்றும் நீ தானய்யா

இசைக்கு ராஜா/

வானெனும் ஏடெடுத்து

கடல்நீல மையெடுத்து

காலமெல்லாம் எழுதினாலும்

தீர்ந்திடாது தொடரும் அய்யா

நின்புகழ்!

வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்

உன் இசை 🎵 கேட்கும்

வரம் கேட்டு தவமிருக்கிறோம்

வாரி வழங்கிடுங்கள் 

நல்வரத்தை சுவாசிக்க

காத்திருக்கிறோம் உங்கள்

கானத்தை . . !

                        பிரியமுடன்,

           *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments