ஆடிப்பெருக்கு 2023 : கோடி கோடியாய் செல்வம் கொட்ட என்ன செய்ய வேண்டும்?
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி பூரம் என பல விசேஷங்கள் நிறைந்திருக்கின்றன. ஆடி பெருக்கு சிறப்புகள் என்ன, ஏன் ஆடி பெருக்கு தினத்திற்கு அவ்வளவு சிறப்பாக வழிபடுகிறது என்பதைப் பார்ப்போம்...
சிறப்புகள்
· 1. ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
· 2. மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம்.
· 3. திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள் சரடு மாற்றிக்கொள்ளும் வழக்கம் நிலவுகிறது.
ஆடி மாதம் தொடங்கினாலே கிராமங்கள் திருவிழாக்களால் களைக்கட்டத் தொடங்கி விடும். தெய்வீகம் பொருந்திய ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி 18 (ஆடிப்பெருக்கு), கிராமங்களில் கோயில் திருவிழா என விசேஷங்கள் நிறைந்ததாக மக்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கக்கூடிய அருமையான மாதம். ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிகவும் விசேஷமானது மட்டுமல்லாமல் மக்கள் வாழ்வில் ஒளியையும், வளம், நம்பிக்கையை பெருக்குவார் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மனை நினைத்து வழிபட்டால் கணவன் - மனைவி அன்பு, நெருக்கம் அதிகரிக்கும். இதனால் குடும்பம் தழைத்துச் செழிக்கும் என்பது நம்பிக்கை. ஆடி பெருக்கு குறித்து சிலப்பதிகாரத்தில் குறிப்பு இருக்கிறது. அதே போல் பல சங்க இலக்கியங்களில் ஆடி 18 குறித்து குறிப்புகள் உள்ளன. ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
எதிரிகளை வெல்ல துர்க்கை அம்மன் மூல மந்திரம்
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்
பொருள்:
காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே! என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே! உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவுபடுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.
சொல்லும் முறை..
அம்மனுக்கு உகந்த செவாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் குளித்து, உடல், மனத்தூய்மையோடு ராகுகால வேளையில் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறவேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும். செய்வினை, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள்.
ஆடி பட்டம் தேடி விதை என முன்னோர்கள் சொல்வது வழக்கம். சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் சுட்டெரித்த வெயில் குறைந்து இந்த மாதத்தில் பருவ மழை பெய்வதும், ஆறு, குளங்கள் தண்ணீரால் நிரம்பி பயிர்கள் செழிக்கக் கூடிய மாதம் என்பதால் இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புது வெள்ளம் பெருகுவதால், ஆடி பெருக்கு என முன்னோர்கள் இந்த தினத்தை மிகவும் கோலாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஆடி மாதம் ஏன் அவ்வளவு முக்கியம்? - Importance
of Pathinettam Perukku
கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என 3 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பூசம் நட்சத்திரம் சனி பகவானுக்குரியது. சூரியன் சனியின் பிடியில் இருக்கும் பூசம் நட்சத்திரத்திலிருந்து விடுபட்டு, புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18). இதனால் சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது.
ஏனெனில் சூரியனும், புதனும் நட்பு கிரகங்கள். சூரியனின் இந்த சக்தி நிறைந்த கதிர்களால், ஆடி மாதத்தில் விதைக்கப்படும் விதைகளுக்கு ஒரு வித புத்துணர்ச்சியும், வலிமையும் அளித்து பச்சை பசேல் என சிறப்பாக வளர உதவிக்கரமாக இருக்கிறது.
பண்டிகையான ஆடி :
பல விசேஷங்கள் நிறைந்த ஆடி மாதத்தில், கைக்குத்தல் அரிசியில் வெல்லமிட்டு பொங்கல் செய்து அம்மனுக்கு விசேஷ படையல் போடுவதும், புத்தாடை அணிந்து. எல்லை தெய்வங்களை வழிபடுவது முக்கிய வழிபாடாக கிராம மக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த உண்மையை தெரிந்து கொண்டால் எதை நினைத்தும் சஞ்சலப்பட மாட்டீர்கள்!
சிறப்பு குளியல்
ஆடி 18ம் தேதி மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காவிரி ஆற்றை தெய்வமாக வணக்கி அதை வரவேற்று அதில் நீராடி வழிபடுவர். இதனால் பயிர்களுக்குத் தேவையான நீர் வளம் கிடைக்கும் என நம்புகின்றனர். புதுவெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி அம்மனை வணங்குவதால் காவிரியன்னை தன்னை வணங்கும் பெண்களுக்கு நல்ல கணவன் அமையும் என்றும், திருமணமான பெண்ணுக்கு கணவனின் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுப்பாள் என்பது நம்பிக்கை. கொடுப்பாள் என்பது நம்பிக்கை.
கறுப்பு கயிறு காலில் கட்டிக்கொள்வது ஏன் தெரியுமா ?
இந்த அற்புத தினத்தில் காவிரி படித்துறையில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள் சரடு மாற்றிக்கொள்ளும் வழக்கம் நிலவுகிறது. அதே போல் ஆண்கள் வலது கையில் கட்டிக் கொள்வதும், கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிறை காப்பு போல கட்டிக் கொள்வது வழக்கமாக உள்ளது.
ஆடிப்பெருக்கில் இந்த 5 பொருட்கள் வாங்குங்க செல்வம் பெருகும்
:-
ஆடி மாதத்தில் அம்மனின் அருளை பெருவதுடன் அனைத்து விதமான சுப காரியங்களையும் துவங்குவதற்கு மிகவும் ஏற்றமான நாள்
ஆடிப்பெருக்கு பூஜை :-
ஆடி மாதம் 18 ம் நாளை ஆடிப்பெருக்கு, ஆடி பதினெட்டாம் பெருக்கு என பல பெயர்களில் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் எதை செய்தாலும் அது பல மடங்காக பெருகும். தொட்டது துலங்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் நதித்துறைகளில் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். திருமணமான பெண்கள் தங்களின் தாலி பாக்கியம் பலப்படுவதற்காக சிறப்பு வழிபாடு செய்து, தாலி சரடு மாற்றிக் கொள்வார்கள். திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் வழிபாடு செய்தால் மனதிற்கு பிடித்த நல்ல கணவன் அமைவார்.
நதிக்கரைக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் சிறிதளது மஞ்சள், உப்பு கலந்து பூஜை அறையில் வைத்து வழிபடலாம். வடை, பாயசம் போன்ற நைவேத்தியங்கள் படைத்து, குலதெய்வத்தை வழிபடலாம். காலி கயிறு மாற்றிக் கொள்ளும் பெண்கள் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, உச்சிப் பொழுதிற்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். பகல் பொழுதிற்கு பிறகு தாலி சரடு மாற்றக் கூடாது. வீட்டில் வழிபாடு செய்கிறவர்கள் மறக்காமல் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு தான் மற்ற பூஜைகளை செய்ய வேண்டும்.
ஆடிப்பெருக்கன்று எந்த பொருள் வாங்கி வீட்டில் சேர்த்து வைத்தாலும் அது பெருகிக் கொண்டே இருக்கும் என்பதால் பலர் இந்த நாளில் தங்கம், புதிய ஆடைகள் போன்றவைகள் வாங்கி வைப்பது வழக்கம். ஆனால் அனைவராலும் தங்கம் வாங்க முடியாது. இந்த நாளில் தங்கம் தான் வாங்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அதற்கு மாற்றாக வேறு பொருட்களையும் வாங்கலாம். மங்களம் தரும் பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பது சிறப்பானது.
ஆடிப்பெருக்கில் வாங்க வேண்டிய பொருட்கள்
குறிப்பாக 5 பொருட்களை ஆடிப்பெருக்கு நாளில் வாங்கி வீட்டில் வைத்தால் வீட்டில் வறுமை என்பது எப்போதும் இருக்காது. அதோடு செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். மஞ்சள், உப்பு, வெல்லம் அல்லது சர்க்கரை, அரிசி, பருப்பு ஆகிய 5 பொருட்களை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். பிறகு அவற்றை நாம் தினசரி சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆடிப் பெருக்கு நாளன்று நாவல் பழம் வாங்கி நைவேத்தியமாக படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. நாவல் பழம் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும். நாவல் பழம் கிடைக்காதவர்கள் நெல்லிக்காய் கிடைத்தாலும் படைத்து வழிபடலாம். இவை அனைத்தும் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படும் பொருட்களை என்பதால், இவற்றை வாங்கி வைத்து வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் என்றும் நிறைந்திருக்கும்.

.jpg)
Post a Comment