#முதல்_முறையாக_சிறுமுயற்சி
#ஆத்திச்சூடி_தன்முனைக்_கவிதைகள்
1. #அறம்_செய்ய_விரும்பு
சந்ததியைக் காத்திடும்
சமயத்தில் செய்த தர்மம்
சட்டென அழித்திடும் நம்
முன்வினை கர்மம்
2. #ஆறுவது_சினம்
கட்டுக்கடங்காத கோபம்
கட்டுப்பாட்டில் வைக்கிறான்
காலம் கடந்து சிந்தித்து
கவலையில் வாழ்கிறான்
3. #இயல்வது_கரவேல்
இயலாதோர் இல்லாதோர்க்கு
இருப்பதை கொஞ்சம் வழங்குங்கள்
இறையருள் பெருகி நித்தம்
செழிப்போடு வாழுங்கள்
4. #ஈவது_விலக்கேல்
அறத்தில் சிறந்த அறம்
எதுவென அறிவீரோ!!
தர்மம் செய்திட விரும்பாவிடினும்
செய்வோரை தடை செய்யாதிருத்தல்
5. #உடையது_விளம்பேல்
ஔவையாரின் ஐந்தாம் ஆத்திச்சூடி
அகத்திலிருந்து அகன்று விட்டால்
தன்னைத்தானே புகழ்திடும்
தற்குறி எண்ணம் வளர்ந்திடும்
6. #ஊக்கமது_கைவிடேல்
முயற்சியும் பயிற்சியும்
உற்சாகத்தை கூட்டிடும்
உயிர் போகும் நிலைவரினும்
ஊக்கமுடன் போராடிடும்
7. #எண்_எழுத்து_இகழேல்
பருவத்தே பயிர் செய்தால்
கழனி எல்லாம் விளைந்திருக்கும்
எண் எழுத்தை விரும்பி
ஏற்றால் வாழ்வது சிறக்கும்
8. #ஏற்பது_இகழ்ச்சி
உழைப்பின் உன்னதம் உணராது
இரந்து வாழ்வது இழிவானது
வறுமையிலும் தளராத
தன்மானம் கொள்வது சிறப்பானது
9. #ஐயம்_இட்டு_உண்
ருசிக்காக உண்ணாமல்
பசிக்காக உண்ணுங்கள்
அதையும் பசித்தவர்க்கு கொஞ்சம்
பகிர்ந்தளித்து மனம் வெல்லுங்கள்
10. #ஒப்புரவு_ஒழுகு
உள்ளன்போடு உதவிடும்
நல்மனம் கொண்டவர்கள்
பகைமையை வேரறுத்து
வெற்றி கொள்ள பிறந்தவர்கள்
11. #ஓதுவது_ஒழியேல்
கற்றதை பிறருக்கு
கற்பிக்கும் பண்பாளர்கள்
வாசிப்பை நேசித்து
வாஞ்சையுடன் சுவாசிப்பவர்கள்
12. #ஔவியம்_பேசேல்
நெஞ்சத்தில் வஞ்சம் இன்றி
அழகுத் தமிழில் பேசிடுவோம்
அகங்காரம் ஏதும் இன்றி
அன்புடன் வாழ்ந்திடுவோம்
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment